தியாக தீபம் அன்னை பூபதியின் இறுதி வார நினைவேந்தல்
உண்ணாவிரத அறப்போர் புரிந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார 4ஆம் நாள் நினைவேந்தல் இன்று (15.04.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட அடாவடிகளை நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது நினைவு தினத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
வடக்கு பிரதேச தலைவர் ந.முரசொலிமாறன் கருத்து தெரிவிக்கையில்
இந்த நிகழ்வானது கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருடைய வசதிகளுக்கும் நேரத்துக்கும் ஏற்ப ழயாக தீபத்தின் தீபச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாமல் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரியோர்களை கொண்டு ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம்.
தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் அழைப்பு நாளானது மேற்படி தியாகதீபம் அன்னை பூபதியின் 35வது நினைவேந்தல் எதிர்வரும் 19.04.2023 அன்று நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் சமாதியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அமைப்பில் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னை பூபதியின் மூத்த மகளான லோ.சாந்தி கருத்து தெரிவிக்கையில்
அன்னை பூபதியின் 35-வது நினைவேந்தல் நிகழ்வினை இம்முறை விசேடமாக நாங்கள் கொண்டாடுகின்றோம். அமைப்புகளை உருவாக்கி அதன் காரணமாக மதம் பேதம் பாராமல் அனைவரும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.
சிவில் சமுக செயற்பாட்டாளர் சபா.சிவயோகநாதன் கருத்து தெரிவிக்கையில்
1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19 ஆம் தேதி அந்த நேரத்தில் இருந்த இந்திய ஆக்கிரமிப்பு படை வெளியேற்றப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் அன்னை பூபதி அவர்கள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து 30 நாட்களின் பின்னர் சித்திரை மாதம் 19ஆம் திகதி தனது உயிரை நீத்தார்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடங்களும் நினைவேந்தள்கள் நடந்தாலும் அவை முறையே செய்வதற்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இந்த முறை சிறப்பாக அந்த நிகழ்வுகள் யாவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றது.
அதனுடைய பரிசளிப்பு நிகழ்வுகள் அன்னை பூபதியின் நினைவேந்தலின்
நிகழ்வுகள் இடம் பெற்றதன் பின்னர் நடைபெறும்.
அன்னை பூபதியின்
அடையாளமாக உண்ணாவிரதம் ஒன்று காலை 6:00 மணி தொடக்கம்
மதியம் ஒரு மணி வரை மாமாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.









புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 17 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
