பண்டாரவன்னியனின் 222ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரமுடன் போராடிய தேசிய வீரர் பண்டார வன்னியன் தலைமையிலான படைகளால் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்றய தினம் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மேற்படி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன் , மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி ) ஜெயகாந் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்.ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.











