இலங்கை போன்று இந்தியாவிலும் கோயில்களை நடத்த முன்வாருங்கள்: அண்ணாமலை வேண்டுகோள் (Photo)
இலங்கை கோயில்களைப் போன்று தமிழக கோயில்களை நடத்துமாறு பா.ஜ.க தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழில் நல்லூர் ஆலயத்தைத் தரிசித்த பின்னர் அரசியல்வாதிகளையும் சந்தித்திருந்தார்.
அதன்பின்னர் நேற்று முன்தினம் தமிழ்நாடு சென்ற நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இருக்கும் எந்த கோயில்களிலும் அரசுக்கு அங்கு வேலை கிடையாது. அதேபோல் நாம் தமிழகத்தில் செய்வோம். யாழ்ப்பாணத்தில் முருகன் கோயில் இருக்கிறது.நல்லூர் கந்தசுவாமி கோயில் எனும் 13 நூற்றாண்டு பழைமை வாய்ந்த கோயில்.அந்த கோயிலை நடத்துவது ஒரு அறங்காவலர். அங்கு அர்ச்சகர்களுக்குத் தட்டில் காசு போட்டால் வாங்கமாட்டார்கள். அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.
பணத்தை உண்டியலில் மாத்திரமே இடமுடியும். VIP, Non VIP என்றெல்லாம் கிடையாது.
அனைவருமே வரிசையில் தான் செல்ல முடியும். தமிழ் நாட்டிலும் இவ்வாறான சட்டத்தைக்
கொண்டு வர முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாகிஸ்தான்! பிரித்தானியாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்த குழு News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவியில் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
