கொழும்பு தனியார் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு! காதலிக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தி
கொழும்பில் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சடலம் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய மாணவனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் யுவதி ஒருவருடன் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனை அந்த யுவதி சில காரணங்களால் தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் தந்தை பன்னிபிட்டியவில் உள்ள தனது தோழி ஒருவரின் வீட்டில் மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு இலகுவாக தங்குமிடத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.
காதலிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்
இந்நிலையில்,இறப்பதற்கு சற்றுமுன்னர் மாணவன் தனது கழுத்தில் போர்வையை மாட்டிக்கொண்ட புகைப்படத்தை தனது காதலிக்கு வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் அனுப்பி தான் தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மின் விசிறியில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
