கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்: வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர்
கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து, அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இந்த நபர், அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
இளம் மாணவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய ஆசிரியர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.
எனினும் மாணவர்களை மண்டியிட்டு அடிக்க கட்டாயப்படுத்திய இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.