கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக் கூட்டம், சங்கத்தின் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் யாப்பு விதிகள் மீறப்பட்டுக் கொண்டிருப்பதால், சங்க மாண்பையும்
சங்கத்தின் ஜனநாயகக் கட்டமைப்பையும் காப்பாற்றும் நோக்கில் அனைத்து
உறுப்பினர்களும் பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற வேண்டும் என்று பிரதான
செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்வாதிகார செயற்பாட்டாளர்கள்
இது பொதுச் சபை உறுப்பினர் ஒவ்வொருவரினதும் பிரதான கடமை.
இதேவேளை புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவுகள் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளை அம்பலப்படுத்தி சர்வாதிகார செயற்பாட்டாளர்கள் சிலரிடம் இருந்து சங்கத்தின் மாண்பையும் சங்க ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுப்பினர்கள் அனைவரும் பொதுச் சபைக் கூட்டத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




