கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை உருவாக்கியது வெளிநாட்டு நிறுவனம் - சஜித் பிரேமதாச
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முதலில் சமர்ப்பித்த கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை உருவாக்கியது அரச சட்ட வரைவாளர்கள் அல்ல எனவும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிப்புரியும் சட்டத்தரணியே அதனை உருவாக்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சாதாரணமாக சட்ட மூல வரைவுகளை அரச சட்ட வரைவாளரே உருவாக்குவார். அப்படி அவர் உருவாக்கி இருந்தால், இப்படி அதிகளவான எண்ணிக்கையில் தவறுகளுடன் அது உருவாக்கப்பட வாய்ப்பிருக்காது.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய இந்த சட்டமூலத்தின் 34.6 வீதமான ஷரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.