நெருக்கடி நிலையை சந்தித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை
நாட்டை விட்டு 372 தாதியர்கள் வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாதியர் பற்றாக்குறை
இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்துள்ளதுடன் தற்போது தேசிய வைத்தியசாலையில் சுமார் 2400 தாதி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கைக்கு ஒரு தாதி இருக்க வேண்டும் என்பது பொதுவான வடிவமைப்பாக இருந்தாலும், தற்போது இரண்டு படுக்கைகளுக்கு ஒரு தாதி மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தேசிய வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதால் வைத்தியசாலையிலுல்ல திணைக்களங்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கூறப்படுகிறது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
