பல்கலை மாணவர் சம்மேளனத்தின் 12 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்ட அழைப்பாளர் மற்றும் 12 பேர் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதசாரிகள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவதற்குப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அழைப்பை ஏற்படுத்தியமைக்காகவே இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு இன்றைய தினம் (07.06.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி
இதன்படி ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடம் பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதையும் இந்த உத்தரவு தடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |