கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் இயந்திர கோளாறு! பயணிகள் அசௌகரியம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற யாழ் தேவி புகையிரதம் இயந்திரக் கோளாறு காரணமாக ஓமந்தை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று காலை 6.25 மணியளவில் புறப்பட்ட யாழ் தேவி புகையிரதம் வவுனியா, ஓமந்தையை கடந்து புளியங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த புகையிரம் இழுத்து வரப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த புகையிரதத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொடிகாமம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற பயணிகள் பலரும் ஓமந்தையில் தங்கியுள்ளனர்.
அவர்களை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி செல்லும் அதிவேக சொகுசு புகையிரதத்தில் மாற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam