கொழும்பு - யாழ்ப்பாண தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இ.ரவீந்திரன்
யாழ்ப்பாணம், கொழும்பு பேருந்து சேவையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (03.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை நாளை முதல் இடைநிறுத்தப் படவுள்ளத்தப்பட்டுள்ளது வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது.
தொடருந்து சேவை இடைநிறுத்தம்
ஆறு மாதங்களுக்கு இந்த திருத்த வேலைகள் நடைபெற இருப்பதினால் தொடருந்து சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது.
அந்த வகையில் கௌரவ வடக்கு ஆளுநர் அவர்கள் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைதேசிய போக்குவரத்து ஆணைக்குழு புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கை களைஎடுத்திருக்கின்றோம்.
அந்த வகையில் குறிப்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபை அதிகார சபை புகையிரத திணைக்களம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
1. யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி தற்பொழுது ஒரு முறிகண்டி வரை பயணிக்கின்றது வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காகவவுனியா அனுராதபுரத்திற்கு 20 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.
2. தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கே பயணிகளை செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
எரிபொருள் தட்டுப்பாடு
நேரடியாக பேருந்துகளிலே கொழும்புக்கு செல்லக்கூடிய வாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.
தற்பொழுது 38 பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்றன அவைகள் தங்களுக்கு ஏற்ற புக்கிங் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இருக்கின்றன.
அந்த பேருந்துகளும் தற்போது கடந்த கால கோவிட் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபடவில்லை அந்த 33 பேருந்துகளையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு நாங்கள் அதனோடு தொடர்புடையவர்களை நாங்கள் கோரியுள்ளோம்.
எனவே உயர்ந்த சேவை நிறுத்தப்பட்டாலும் பொதுமக்கள் காண போக்குவரத்து சேவைகள் பங்கு பெற நின்று செயல்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.