நெடுஞ்சாலையில் விபத்து: இளம் தந்தை உயிரிழப்பு
அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி அருகிலிருந்த வீட்டினுள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் பொப்பிட்டிய நுழைவாயிலில் பொப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
பரண அம்பலம உஸ்வதகேயாவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் ரொஷான் (வயது 43) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |