பொருளாதார நெருக்கடியிலும் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த பெருமை
உலக வங்கி மற்றும் எஸ் என்ட் பீ. சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை (S&P Global Market Intelligence and Financial Services)ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பில் கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் 3 வது இடம் உலகில் 22 வது இடம்
இந்திய பெருங்கடல் எல்லைக்குள் இருக்கும் துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும் உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 வது இடத்திலும் கொழும்பு துறைமுகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.
சமுத்திர துறைமுகம் எப்படி செயற்படுகிறது என்பது ஒரு நாட்டின் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான அங்கம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் எதிர்நோக்கும் முக்கிய சவால்
துறைமுகத்தின் முனையங்கள் குறிப்பாக கொள்கலன்கள் கப்பல்களுக்கு ஏற்றப்படுவது தாமதமாகுதல், விநியோக சீர்குலைவு, மேலதிக செலவுகள் மற்றும் போட்டி தன்மை குறைந்துள்ளமை என்பன துரதிஷ்டவசமானவை.
கொழும்பு துறைமுகம் உலகில் பெறுமதியான கேந்திர மையத்தில் இருந்தாலும் பல்வேறு துறைமுகங்களின் செயல் திறனை ஒப்பிடும் போது நம்பகமான, நிலையான மற்றும் ஒப்பிடக் கூடிய அடிப்படைகள் இல்லாததே துறைமுகத்தின் முன்னேற்றம் தொடர்பாக எதிர்நோக்கப்படும் முக்கிய சவால் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
