அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்
மழையினால் கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகியுள்ளது..
பொது மக்களின் செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில் பலத்த மழை பெய்தது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இதன் பெறுமதி 90.9 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.
கொழும்பு
அதற்கமைய, கொழும்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அந்த மழையுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான போக்குவரத்து, வியாபாரம் போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.