கொழும்பில் தம்பதியை கடத்தி சென்ற கும்பல் கைது!
கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் யுவதி ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் கடத்திச் சென்ற ஆறு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரும் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் நேற்று முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
எப்படியிருப்பினும் தெமட்டகொட விகாரைக்கு முன்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |