அநுரகுமாரவால் ரணிலுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
ராஜபக்சர்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஜூலை 14 ஆம் திகதி வெற்றியுடன் முடிந்து விட்டது என்றும், அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே நடைபெற்றன என்றும், அதனையே படையினர் அடக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களை கிளர்ச்சியாளர்கள் என்று பொய் கூறி அவர்கள் மீது ஆயுதப் படைகளை கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மாபெரும் அராஜகம் ஆகும்.
இது போராடும் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ரணில் வீட்டுக்குப் போ' என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை" என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,