எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்:பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு
இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி தேவையான நிலக்கரி கையிருப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்திரமே போதுமானது என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாது போனால், கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு சுமார் 600 மில்லியன் டொலர்களை செலவிட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இலங்கையிடம் டொலர்கள் கையிருப்பில் இல்லாமை பெரும் நெருக்கடிக்களை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரிகளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
