எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்:பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு
இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி தேவையான நிலக்கரி கையிருப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்திரமே போதுமானது என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாது போனால், கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு சுமார் 600 மில்லியன் டொலர்களை செலவிட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இலங்கையிடம் டொலர்கள் கையிருப்பில் இல்லாமை பெரும் நெருக்கடிக்களை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரிகளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri