எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்:பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு
இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி தேவையான நிலக்கரி கையிருப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்திரமே போதுமானது என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாது போனால், கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு சுமார் 600 மில்லியன் டொலர்களை செலவிட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இலங்கையிடம் டொலர்கள் கையிருப்பில் இல்லாமை பெரும் நெருக்கடிக்களை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரிகளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam