சீன இராணுவ சீருடைக்கு ஒத்த ஆடை அணிந்த இலங்கை வந்த வெளிநாட்டினர்!
சீன இராணுவ சீருடைக்கு ஒத்த ஆடை அணிந்த திஸ்ஸமஹராமவில் வெளிநாட்டினரின் பிரசன்னம் குறித்து எதிர்க்கட்சி இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
சீன இராணுவ சீருடையைப் போன்ற ஆடைகளை அணிந்து திஸ்ஸமஹாராமாவில் உள்ள ஒரு திட்டத்துடன் இணைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இது, இலங்கை, சீனக் குடியிருப்பாக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னரால் கட்டப்பட்டதாக
நம்பப்படும் திஸ்ஸமஹராம வாவியை அகழ்வாராய்ச்சி செய்யும் திட்டத்தில்
வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது