இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு நிகழ்வு
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான குறித்த நிகழ்வினை நேற்று (29) தம்பலகாமம் இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி கலந்து கொண்டு நடாத்தினர்.
சமூக பொருளாதார துறையில் மாற்றங்கள்
கிளீன் ஸ்ரீலங்கா என்பது வெளிச் சுற்றுப் புறச் சூழலை மாத்திரம் சுத்தம் செய்வதல்ல சமூக பொருளாதார துறையில் மாற்றங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது வளவாளராக கலந்து கொண்ட இராணுவ உயரதிகாரியால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 20 மணி நேரம் முன்

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
