ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்
ஈரானில் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடைந்தமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஜனாதிபதி ரைசியின் மரணம், அவரது இடத்திற்கான போட்டியை அதிகார மையத்தில் உருவாக்கும் என்றே நிபுணர்கள் தரப்பின் கணிப்பாக உள்ளது.
அப்படி ஒரு நிலை உருவானால், அது நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் உண்மையான மொத்த அதிகாரமும் உச்சத் தலைவரின் வசமே உள்ளது, ஜனாதிபதியிடம் அல்ல.
ஆனால் அதிகார பகிர்வு தொடர்பில் மோதல் ஏற்படும் என்றால், ஈரான் மீண்டும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக பிரித்தானிய வரலாற்றாசிரியர் Anthony Glees தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் தற்போது ஜனாதிபதி பொறுப்பு 68 வயதான Mohammed Mokhber என்பவரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.
இவர் உச்சத் தலைவருக்கு மிக நெருக்கமானவர் என்றே கூறுகின்றனர்.
இன்னொருவர் 55 வயதான Mojtaba Khameini. இவர் உச்சத் தலைவரின் மகன். இவர் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டில் பெரும் விவாதங்கள் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 1 நாள் முன்
![இப்படியொரு ரிவெஞ் Thriller திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க!! படத்தை மறக்காம பாருங்க..](https://cdn.ibcstack.com/article/10b35ba4-7eda-4c3a-98fe-0887af763208/24-6673d79f0e28f-sm.webp)
இப்படியொரு ரிவெஞ் Thriller திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க!! படத்தை மறக்காம பாருங்க.. Cineulagam
![Visitor விசாவில் கனடா வந்த 50 வயது நபருக்கு கல்வி அனுமதி? கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள விடயம்](https://cdn.ibcstack.com/article/33856768-3609-41e8-aa8e-c05a9999615f/24-6673d911453ae-sm.webp)