இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை வழக்கில் சாதகமான தீர்வு - சிறீதர்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் சட்டத்தரணி லயன் எம்.சிறீதர் மற்றும் லி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (08.10.2022) காலை இடம்பெற்றுள்ளது.
தமது எதிர்கால நலன் கருதியும், இலங்கை பிரச்சினையிலும் மிகவும் அக்கறையாக செயற்பட்டதாக அவர் தெரிவித்தார் என வலி. மேற்கு தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரஜாவுரிமை
அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை மக்களுக்கு இந்தியாவில் பிரஜாவுரிமை கிடைக்கவேண்டும் என்றும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அண்மையிலே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கின் மூலம் தமக்கு சாதகமான தீர்வு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
அந்த தீர்வின் ஊடாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தியாவின் கடவுச் சீட்டுக்களை பெற்று வெளிநாடுகளுக்கு போய்வரக்கூடிய வாய்ப்புகள் இனி கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
தீர்வு கிடைக்க வேண்டும்
எங்களுடைய இலங்கை பிரச்சினை தொடர்பாக நீங்கள் அதிக கரிசனை காட்ட வேண்டும் நாங்களும் நீண்ட காலத்திற்கு இப்படி வாழமுடியாது.
எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான செயற்பாடுகளை முழுமையாக உங்களது கட்சியும், உங்களது தலைவர் கமல்ஹாசனும் முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்” என்று வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam
