30 இலட்சம் கிலோ நெல் காணாமல்போன விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்
நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விசாரணைகளின் முதற்கட்ட அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட(Puthik Ittamalkoda)தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான நெல் கொள்வனவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன நெல் கையிருப்பின் பெறுமதி 1 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நெல் விற்பனைச் சபை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

11 ஆம் திகதிக்குள் விவசாயிகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri