நெருங்கும் பண்டிகைக் காலம்! கேக் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பண்டிக்கை காலங்களில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன(N.K Jayawardena) தெரிவித்துள்ளார்.
கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரியதாகவும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் கேக் உள்ளிட்ட உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் கேக் ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
