இலங்கைக்கு வரும் சீனாவின் பயிற்சி கப்பல்
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளது.
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேர்னல் ஜாங் சியாவோங்கின் அறிக்கையின்படி, 2024 ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் பிற்பகுதிக்கு இடையில் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்முறை திறன்கள்
வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங்கில் தொழில்நுட்ப நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சி, தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணம் இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த முயல்கிறது.
அத்துடன் எதிர்கால கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
