வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை

Sri Lanka Government of China China India China Ship In Sri Lanka
By Chandramathi Oct 28, 2022 11:36 PM GMT
Chandramathi

Chandramathi

in கட்டுரை
Report
Courtesy: சி.எல்.சிசில்

இலங்கையின் வடக்கில் கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களைப் பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயல் நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவித்துள்ள மாநில புலனாய்வுப் பிரிவு கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன இராணுவத்தினரின் நடமாட்டம்

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை | Chinese Soldiers In Civilian Clothes In The North

சீன இராணுவத்தினரின் நடமாட்டம், செய்மதிகள் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு, இலங்கையின் வட பகுதியில் ஆளில்லா விமானங்கள், ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களைப் பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தைச் சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் எச்சரிக்கை

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை | Chinese Soldiers In Civilian Clothes In The North

தமிழ்நாடு எல்லை பாதுகாப்புக் குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி செய்மதிகள், ரொக்கட்கள் கண்டங்களுக்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனக் கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து எச்சரித்திருந்ததுடன் தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்திருந்தது.

முல்லைத்தீவு, அனலைதீவு, மீசாலை,சாவகச்சேரி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கான சீனப் பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் கடற்தொழிலாளர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற கடல் வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம், வடக்கு,கிழக்கு பகுதியில் இந்தியாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை | Chinese Soldiers In Civilian Clothes In The North

ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் வருகையைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு தனது தென்கிழக்கு கரையோர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பல் விண்வெளி–செய்மதி கண்காணிப்பு திறன் கொண்டதாகவும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் கொண்டதாகவும் காணப்பட்டது.

இதன் காரணமாக தனது 1076 கிலோமீற்றர் கரையோரப்பகுதியில் உள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அதிகரித்திருந்தது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கியதும் இது குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.

தனது பாதுகாப்பு பொருளாதார நலன்களில் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

சீனா தொடர்பான சர்ச்சைக்குரிய உண்மை 

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை | Chinese Soldiers In Civilian Clothes In The North

சீனப் பிரஜைகள் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் நாயகம் இலங்கையில் சீனப் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது சர்ச்சைக்குரிய உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய சர்வதேச கடல் பரப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு சீனத் தூதுவர் அடிக்கடி விஜயம் மேற்கொள்வது கடலட்டை பண்ணைகள் என்ற பெயரில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தி ஆய்வு செய்வது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு இலங்கை மாணவர்களுக்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குகின்ற அதேவேளை சீனா தனது நாட்டில் பட்டப்பின்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு நிதியை வழங்குகின்றது.

சீனா தனது எதிர்காலத் திட்டத்துக்காக இலங்கை இளைஞர்களை கவர முயல்கின்றது என்பது வெளிப்படை என அவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு நடவடிக்கை

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை | Chinese Soldiers In Civilian Clothes In The North

தமிழ்நாட்டின் கடல்சார் இயக்குநராகவும் பணியாற்றும் மிட்டல் இந்திய கடல் பரப்பிற்குள் சீன நாட்டவர்கள் மாத்திரம் ஊடுருவுவார்கள் என்ற உத்தரவாதமில்லை.

சீனா தனது நடவடிக்கைகளுக்காக பயிற்சி வழங்கிய எவரும் தென்கிழக்கு இந்திய கடற்பரப்பிற்குள் நுழையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு புலனாய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் கரையோரங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் தனது அனைத்து கரையோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கடற்கரையோரத்தில் முக்கிய பகுதிகளில் நிறுத்துவதற்காக உருவாக்குவதற்கு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் உதவ வேண்டும் என சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு என அனுமதிக்கப்பட்ட 800 பேரில் 50 வீதமானவர்களுக்கான வெற்றிடம் உள்ளது.

தற்போது பணியில் இருப்பவர்கள் 42 பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்றனர். குறைந்தளவு ஆள்பலத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு அரசாங்கம் ஏற்கனவே இராமேஸ்வரம் அருகே 240 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தாலும் பிராந்திய கடல்சார் கடலோர பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US