சீன கப்பல் விவகாரம்! துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - வெளிச்சத்திற்கு வந்த தகவல்

Hambantota Government of China India China Ship In Sri Lanka
By Steephen Aug 11, 2022 06:06 AM GMT
Report

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பல் துறைமுகத்திற்கு வருவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீனாவின் யுவான் வாங் 05 என்ற ஆய்வு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் துறைமுக அதிகாரிகளிடம் கேட்ட போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

ஊடக செய்திகள் மூலமே கப்பல் வருவது பற்றி அறிந்தோம்

சீன கப்பல் விவகாரம்! துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - வெளிச்சத்திற்கு வந்த தகவல் | Chinese Ships Do Not Receive Permission Enter Port

தற்போது வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மூலம் மாத்திரம் இது குறித்து அறிந்து கொண்டோம். அப்படியான கப்பல் ஒன்று துறைமுகத்திற்கு வருகை தருமாயின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

யுவான் வாங் 05 ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக இந்தியாவின் என்.டி.டி.வி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்று முற்பகல் 9.30 அளவில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

கப்பலில் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளம் - மேலும் பல முக்கிய தகவல்கள்

சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதன் காரணமாக தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில், யுவான் வாங் 05 கப்பல் சீனாவின் புதிய தலைமுறை விண்வெளியை பின் தொடர்ந்து கண்காணிக்கும் கப்பல் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் விபரித்துள்ளனர்.

அத்துடன் இந்த கப்பல், சீனா மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய உதவி படைப்பிரிவால் கையாளப்படுவதாக சீனாவின் தகவல்கள் கூறுகின்றன.

சீன கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதியை பெறவில்லை- அதிகாரம் பெற்ற அதிகாரி

இந்த நிலையில் துறைமுக அதிகாரி சபையின் அதிகாரம் பெற்ற அதிகாரியான ஹாபர் மாஸ்டர் கெப்டன் நிர்மால் பீ.சில்வா, சீனாவின் கப்பல் பற்றி தெரிவிக்கையில், ஆராய்ச்சி கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்கு எந்த அனுமதியையும் இதுவரை தான் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து கப்பல்களும் என்னிடம் அனுமதியை பெற வேண்டும். சாதாரண வர்த்தக கப்பல் என்றால், நேரடியாக என்னிடம் வந்து அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், இது ஆராய்ச்சி கப்பல் என்பதுடன் அதற்கு ராஜதந்திர தொடர்புகள் இருப்பதால், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் ஊடாக அனுமதியை பெற்று, அதன் பின்னர் என்னிடம் அனுமதியை பெற வேண்டும்.

இந்த கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் சீன கப்பல் துறைமுகத்திற்குள் வருவதற்கு அனுமதியில்லை.

எனினும் வெளிவிவகார அமைச்சு உட்பட பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் அனுமதியை வழங்கினால், நான் தேவையான அனுமதியை வழங்க முடியும். எனினும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு குறைந்தது 9 ஆம் திகதியாவது அனுமதியை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான அனுமதி இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என நிர்மால் பீ.சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது கப்பல் இன்று 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை நிலை கொண்டிருக்கும் என சீன தெரிவித்திருந்தது.

இந்தியாவின் எதிர்ப்புக்கான அடிப்படை காரணமும் பாதுகாப்பு உடன்படிக்கையும்

சீன கப்பல் விவகாரம்! துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - வெளிச்சத்திற்கு வந்த தகவல் | Chinese Ships Do Not Receive Permission Enter Port

சீனாவின் கப்பல் இலங்கைக்கு வரும் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிடுவதற்கு ஒரு அடிப்படை காரணம் உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின், அப்படியான சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு படையினருக்கு இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்த இலங்கை, இடமளிப்பதை தடை செய்யும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

மறுபுறம் குறிப்பாக இந்தியா, இலங்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக சீனாவின் கப்பல் இலங்கைக்கு வரும் இந்த காலம் தொடர்பில் இந்தியாவுக்கு உணர்வு ரீதியான ஒரு சினம் ஏற்பட்டிருக்கலாம்.

இதனடிப்படையிலேயே இந்தியாவின் எதிர்ப்புகளுக்கு பின்னர், புதிதாக பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், யுவான் வாங் 05 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஆலோசனை வழங்கப்படும் வரை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US