இலங்கையில் இருந்து சீன எழுத்துக்களுடன் இந்தியாவிற்கு சென்ற புறா: எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையில் இருந்து பறக்கவிடப்பட்ட புறா ஒன்று தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் படகில் தஞ்சமடைந்தமை தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவரது படகு பாம்பனில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் பாக்கு நீரிணையில் இருந்தபோது, கடந்த 15 ஆம் திகதி குறித்த புறா அதில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, புறாவை மீட்ட கடற்றொழிலாளர்கள் அதனை இராமேஸ்வரத்தில் புறாக்களை வளர்க்கும் கடற்றொழிலாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.
காலில் சீன எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கர்
இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரது பெயர், தொலைபேசி இலக்கமும் மற்றுமொரு காலில் சீன எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கரும் எண்களும் காணப்படுவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர் இருந்ததால், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படை ரோந்து கப்பலின் நடமாட்டம், கடல் பாதுகாப்பு குறித்து உளவு பார்க்க சிறிய ரக கேமராவை புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
