பிரதமர் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமான பதில்
தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்குச் சீனாவிற்கு வருகை தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீவை அலரி மாளிகையில் இன்று (09) சந்தித்த போது குறித்த விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ,
இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியாக அறிவுறுத்தினார்.
சீனாவின் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
கோவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு முடியாது போயுள்ளது என கூறினார்.
பிரதமரின் கோரிக்கைக்குப் பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஒத்துழைத்தல், துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான முதலீடுகளை ஈர்த்தல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையின் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே பௌத்த மற்றும் கலாச்சார உறவினையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பினை தொடர்ந்து கீழ்வரும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்
சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்
சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சீன கொம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு நூறாண்டுகள் பூர்த்தி மற்றும் சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு நினைவு நாணயமொன்றை வெளியிட்டிருந்தது.
அந்நாணயங்களை இதன்போது பிரதமர் சீன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ , 'இலங்கைக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்குச் சீனா தொடர்ந்து செயற்படும்' எனக் குறிப்பிட்டார்.
இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது,
அமைச்சர் அவர்களே, உங்களை மீண்டும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம். இத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நீங்கள் இலங்கைக்கு வருகைத்தந்தீர்கள். நீங்கள் மீண்டும் வருகைதந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி.
இந்த ஆண்டு நம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான ஆண்டாகும். இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். இந்த முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி விசேட நினைவு நாணயத்தை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான ஒத்துழைப்பிற்குச் சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினோஃபார்ம் தடுப்பூசிகளின் தொடர்ச்சியான விநியோகம் எங்கள் தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளது.
ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையின் பொருளாதாரமும் தொற்றுநோய் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. நமது பொருளாதார மீட்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான சீனாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் சீனா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன், இந்த சவால்கள் விரைவில் சமாளிக்க
முடியும் என நம்புகிறோம்.
பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உங்களுடனும் சீன அரசாங்கத்துடனும் நெருக்கமாக
பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன் என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம் Manithan

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022