இலங்கை முழுவதும் பாடசாலை மாணவர்களுக்கு சீனா சீருடைத் துணி
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(10.11.2024) மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி செயற்பாடு
“இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா பல வழிகளிலும் உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு சீருடை துணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும், இந்திய அத்து மீறிய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படும்
இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளினால் வடக்கு கடலும் மக்களும் பாதிக்கப்படும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு கடற் பகுதி மக்கள் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் வருகையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் நிலை குறித்து நான் அறியும் நிலையில் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தையும் மக்களையும் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை அனுமதிக்க முடியாது’’ என்றார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam