இலங்கை கடன் விடயத்தில் சொந்த கடன் முகாமைத்துவத்தை விரும்பும் சீனா
ஏனைய கடனாளர்களுடன் பொதுவான நெறிமுறையைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இலங்கையின் கடன் விடயத்தில் சீனா, தமது சொந்த கடன் முகாமைத்துவத்தையே விரும்புகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலங்கை தற்போது தனது கடன்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதற்கு இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளன. சீனாவும் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
கடன் வழங்கும் நாடுகள்
இந்தநிலையில், நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அண்மையில் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையுடன் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் பெற்ற எக்சிம் வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் சீனா, இலங்கைக்கு உதவுவதைக் கடன் மறுசீரமைப்பு என்று அழைக்க விரும்பவில்லை. மாறாக அதனைக் கடன் நிர்வகிப்பாகவே பார்க்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடன் வழங்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் அவை, முழு கடன் மறு திட்டமிடல் செயல்பாட்டில் அனைவருடனும் சமமான அணுகுமுறையை வலியுறுத்துகின்றன.
இதேவேளை சீனாவின் கடன் வழங்குவோருக்கு இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri