இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள சீனாவின் பாதுகாப்பு மந்திரி
சீனாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வீ ஃபெங் அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.
ஏப்ரல் 27 முதல் 29 வரை ஜெனரல் வீ இலங்கைக்கு மூன்று நாள் மாநில பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கையின் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணம், ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் சீன அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ளும் மிக உயர்ந்த மட்ட பயணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அத்துடன் மூத்த சீன இராஜதந்திரி, யாங் ஜீச்சி கடந்த அக்டோபரில் விஜயம் செய்ததைத் தொடர்ந்து சீனாவின் மிக உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.
சீனப் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மற்றும் பிற முன்னணி அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
