செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா
செயற்கை சூரியன் (Artificial Sun) என்று அழைக்கப்படும் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை முறையைச் சீனா வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த முறைமை எதிர்காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
மின்சார தேவை தொடர்ந்து அதிகரிப்பு
மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலும் தற்போது மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் கருவிகள் வந்துவிட்டதால் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனை ஈடுசெய்ய மின் உற்பத்தியை அதிகரிக்கவும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.
இதன்படி சீனா மின்சாரத்தை நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
1,000 வினாடிகள் நீடிப்பு
அதன் ஒரு பகுதியாகச் சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதை ஆய்வாளர்கள் 'செயற்கை சூரியன்' என்று அழைக்கிறார்கள்.
இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2023இல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
