தமிழ் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரோவின் விளம்பரம்
தமிழ் நாட்டில், இஸ்ரோவின் புதிய ஏவுகணை வளாகம் தொடர்பான விளம்பரத்தில்; 'சீனக் கொடி' இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இது வடிவமைப்பாளரின் தவறு என்றும் வேறு உள்நோக்கங்கள் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த விளம்பரத்தில் ஒரு சிறிய தவறு நடந்துள்ளது. வேறு எந்த நோக்கமும் இல்லை. எப்போதும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் இதயத்தில் இந்தியா மீது அன்பு மட்டுமே உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த காரணத்திற்காகவும் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசதிகள்
தமிழ்நாடு குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ஏவுதள வளாகத்திற்கான கோரிக்கையை முதன்முதலில் மறைந்த தலைவர் கருணாநிதியே முன்வைத்தார் என்றும் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக மக்களிடம் திராவிட முன்னேற்றக்கழகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த 28 அன்று, பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ஏவுகணை வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
986 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆண்டுக்கு 24 ஏவுகணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri