கொழும்பு துறைமுக நகரத்தில் சீன காவல்துறை என்ற கருத்துக்கு இடமில்லை! - அரசாங்கம் தெரிவிப்பு
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன காவல்துறை என்ற கருத்துக்கு இடமில்லை என்று இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை காவல்துறை மட்டுமே நிர்வகிக்கும் என்று நிதி மற்றும் மூலதன சந்தை மற்றும் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் ஒரு சீன குடியிருப்பாக இருக்கும், அங்கு சீன காவல்துறை சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் என்ற கூற்றை அமைச்சர் மறுத்துள்ளார்.
இதற்கு மாறாக கொழும்பு துறைமுக நகரம் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்
என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.