இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சீனாவே காரணம்: தாய்வான் குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் பெருந்தொற்று தான் காரணம் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஆனால் சீனாவிடம் இருந்து இலங்கை அதிக கடனை வாங்கியதும், அரசியலை முறையாக செய்யாமையுமே இந்த நிலமைக்கான காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாய்வான் அரசாங்கம் தமது பிரஜைகளை தெற்காசிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் தற்போது சுமார் 60 தைவான் பிரஜைகள் இருப்பதாவும் அவர்களுக்கான உதவிகளை தமது அரசாங்கம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை

இலங்கையில் வசிக்கும் தாய்வான் வர்த்தகர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நிலவும் மின்சார,எரிபொருள் தட்டுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழிலை நடாத்தி செல்ல முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan