மட்டக்களப்பில் சிறுவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி
சிறுவர்களின் பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சி கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டுள்ளது.
பயிற்சியுடன் கூடிய இந்த செயலமர்வு கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் புதன்கிழமை (31) வரை இடம்பெறவுள்ளது.
பயிற்சியுடன் கூடிய செயலமர்வு
இதன்போது, சிறுவர் உரிமைகள், சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையிடல், சிறுவர் வன்முறைக்கு எதிராக புகாரளித்தல், ஆய்வு செய்தல் மற்றும் நேர்காணலில் சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்களுடன் சிறுவர்களின் பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாகவும் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளன.
இந்த செயலமர்வில், எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். மஹ்ருப் , வளவாளர் கலாநிதி எம்.சி. றஸ்மின், திட்ட உத்தியோகத்தர் ஆர். நதியா, தொடர்பாடல் உதவியாளர் பி.கௌசலியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.