அமெரிக்க ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கொடூரம்: மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி
அமெரிக்காவின் டென்னசி, நாஷ்வில்லி நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலர் பாடசாலை முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் தனியார் பாடசாலையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
பெண் துப்பாக்கிதாரி
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. பாடசாலையில் அத்துமீறி நுழைந்த பெண் துப்பாக்கிதாரி ஒருவரினாலே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றுள்ளனர். இவர் நாஷ்வில்லில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரப்படி, இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் குறைந்தது 128 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.