தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை தவிர்க்குமாறு கண்காணிப்பாளர்கள் கோரிக்கை
தேர்தல் பிரசாரக்களம் தீவிரமாகியுள்ள நிலையில், அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள்
இந்தநிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய கண்காணிப்பாளர்களும், அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க, இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
