தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை தவிர்க்குமாறு கண்காணிப்பாளர்கள் கோரிக்கை
தேர்தல் பிரசாரக்களம் தீவிரமாகியுள்ள நிலையில், அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள்
இந்தநிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய கண்காணிப்பாளர்களும், அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க, இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
