உயிருக்கு போராடும் பாலகன்: உதவி கோரும் பெற்றோர் (Video)
பூண்டுலோயா- டன்சினன் பகுதியில் சாதரண நடுத்தர வாழ்க்கை வாழும் பெற்றோருக்கு பிறந்த ஒரு பாலகன் தனது பத்தாவது மாதம் முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவனுக்கு தற்போது மூன்று வயது பூர்த்தியாகியுள்ள நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த புற்றுநோயால் வாடுவதாக பெற்றோர் லாங்காசிறி இன் “கதை கேளு” நிகழ்ச்சியில் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,
“எனது மகனின் பெயர் ஹர்ஷித். கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு அடிக்கடி செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காரணம், எனது மகனின் இந்த புற்றுநோய்.
நுவரெலியா வைத்தியசாலையில் தான் நாங்கள் சிகிச்சையளித்து வருகிறோம். ஆனால் அந்த வைத்தியசாலையில் கை விரித்துவிட்டது.
அவர்கள் எங்களுக்கு கூறியதாவது, இலங்கையில் இதற்கான மாற்று சிகிச்சை வசதிகள் இல்லை இந்தியாவில் தான் உள்ளது. இது குறித்து இந்தியா- பெங்களூரில் இருந்து ஒரு அறிக்கை வந்தது.
அந்த அறிக்கையில் இந்த புற்றுநோயை குணப்படுத்த வேண்டுமெனின் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் தேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்”.
இந்நிலையில் இந்த சிறுவனை பாதித்திருக்கும் நோயை குணப்படுத்த பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். தொடர்புகளுக்கு (077 880 7615)

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
