யாழில் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!
சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயது சிறுவனை அதே இல்லத்தில் பணியாற்றும் காப்பாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் சிறுவன் துன்புறுத்தப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது குற்றப்பார்வை நிகழ்ச்சி,
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam