இலங்கை - இந்தியா கடற்றொழில் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் கடற்றொழில் படகுகளும் சிறைபிடிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் அவர்களது கடற்றொழில் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதியன்று கடற்றொழிலுக்குச் சென்ற 10 பேரையும், 18ஆம் திகதியன்று 18 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு