வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவர் எடுத்த விபரீத முடிவு
வவுனியாவில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்தப் பெண் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட அந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan