வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவர் எடுத்த விபரீத முடிவு
வவுனியாவில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்தப் பெண் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட அந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
