சேருவில பிரதேச சபையின் பாதிடு நிறைவேற்றம்!
தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சேருவில பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஜி.துஷார சம்பவத்தில் பாதீடானது இன்று (24) திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது.
சேருவில பிரதேச சபையின் 16 மொத்த உறுப்பினர்களிர் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இன்றைய பாதீட்டுக்கு சமூகமளித்திருந்தனர்.
பாதிடு நிறைவேற்றம்
சர்வஜன பலய கட்சியின் உறுப்பினர் சபை அமர்வுக்கு வருகை தரவில்லை. அதேபோன்று இன்றைய அமர்வுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கண்டுகொள்ளாத நடுநிலைமையை வகித்தார்.
இந்த நிலையில், வாக்களிப்பில் கலந்து கொண்ட 14 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும் 05 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசி கட்சிகளின் ஆகிய உறுப்பினர்கள் பாதிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பாதிட்டுக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri