செம்மணியில் அடித்து விரட்டப்பட்டதன் பின்னணி! நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனின் விளக்கம்
செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு வந்த அமைச்சர் சந்திரசேகர் மற்றும் எமது குழுவினரை சில கட்சியினரும் ஊடகங்களுமே விரட்டியடித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
செம்மணி போராட்டத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகர் மற்றும் அவருடன் இருந்த தேசிய மக்கள் சக்தியினரும் அந்த இடத்திலிருந்து இன்றையதினம்(25) விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் சில கூட்டங்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



