செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் - அருட்தந்தை மா. சக்திவேல்
செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (13.06.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும், செம்மணி சமூக புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்கையில் தற்போது குவியல் குவியல்களாகவும் மனித எச்சங்கள் காணப்படும் நிலையில் அதற்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகளினதும் உடல் எச்சங்களோடு அவர்களின் பாவனை பொருட்களான பால் போத்தில், விளையாட்டு பொருட்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் வெளிவருவது படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் மட்டுமல்ல அரச பயங்கரவாத சிங்கள பௌத்த பேரினவாத இராணுவ கட்டமைப்பின் தமிழ் இன கொலைவெறி உளவியலும், இனப்படுகொலை கோரத்தாண்டவத்தை வடிவமைத்த ஆட்சியாளர்களின் மிகவும் வக்கிர அரசியல் வெறி முகமும் சேர்ந்தே வெளிப்படுகின்றது.
பகிரங்க வாக்குறுதி
இதுவரையான காலப்பகுதியில் 350க்கும் அதிகமான என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மன்னார் சதொச சமூக புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளையும் விட அதிகரித்து செல்லலாம் எனும் அச்சம் கலந்த பய உணர்வுக்குள்ளும் எமை தள்ளியுள்து.

மக்கள் விடுதலை முன்னணியின் 1988/89 கிளர்ச்சியை அடக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசு பயங்கரவாத இயந்திரமான பொலிஸார், இராணுவத்தினரை மட்டுமல்ல மறைமுக கொலை குழுக்களையும் பாவித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்தது.
அத்தோடு படலந்த போன்ற வதை முகாம்களையும் நடாத்தி சென்றதை அனைவரும் அறிவர். அன்று சூரியக் கந்தையில் பாடசாலை பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டமை மக்கள் மத்தியிலே பெரும் அச்சப் பீதியை ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக 1994 ஆட்சி பீடம் ஏறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தனது ஆட்சிக் காலத்தில் இறுதி வரையில் அந்த கொடூரத்துக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை.
சந்திரிகா அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி தங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு சந்திரிக்கா கொடுத்த பகிரங்க வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் நீதியை பெற்றுக் கொட்டுக்குமாறும் கேட்கவில்லை.
பின்வாங்கியமைக்கான காரணம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடக் கூடாது எனும் தங்கள் மனச்சாட்சியை கொன்ற கொலைவெறியே என்பதும் நாம் அறிந்ததே.
சந்திரிகா பண்டார நாயக்காவைத் தொடர்ந்து 1988/ 89 காலப்பகுதியில் நடந்த கொடூரத்தையும் மனித உரிமை மீறல்களையும் அறிக்கையாக தயாரித்துக் ( ஊடகவியலாளர் திஸ்சநாயகம் தயாரித்து கொடுத்த) கொண்டு ஜெனீவா மனித உரிமை ஆணையகம் நோக்கி ஒடிய மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் தாம் தாயாரித்த 1988/89 காலப்பகுதி கொடூரத்தின் அறிக்கையை திரும்பிப் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடும் என்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கான எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan