தமிழர்களை புறக்கணித்த ரணில்: சாள்ஸ் எம்.பி குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையானது நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைந்திருந்தது எனவும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் முன்வைக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''தமிழர்களுக்கு இனரீதியாக பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. மத கலாசாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடாதது வருத்தமளிக்கின்றது.
குறிப்பாக 2 மில்லியன் மக்களுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கே காணி பத்திரம் வழங்கப்படும் நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் சில மக்கள் காணிகள் அபகரிப்பிற்கு உட்பட்டுக்கொண்டிருந்தமை முக்கியமான விடயம்." என்றார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |