கேரளாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைப்பு
இந்தியாவில் கேரளா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 13 இலங்கை அகதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விலக்கிக் கொள்ளப்பட்ட சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டு
இதன்போது 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் விசேட தேவை கொண்ட 5 வயது சிறுவன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இந்திய சட்டத்தின்கீழ் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள அரசாங்க பெண்கள் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் முயற்சி
இதேவேளை விசேட தேவை கொண்ட சிறுவன் தனது தாயுடன் திருவனந்தபுரம், அட்டகுளங்கரா சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொல்லத்தில் உள்ள தங்கசேரியில் வைத்து இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொல்லத்தில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா அல்லது கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri