முல்லைத்தீவு எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை (photos)
முல்லைத்தீவு - துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமான மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட இரு பீப்பாய்களில் பெட்ரோலை நிரப்ப ஆரம்பித்த போது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த எரிபொருள் நிலையத்தில் பெரும் குழப்ப நிலை உருவாகியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முரண்பாடு
பெரல்களில் பெட்ரோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட (காலையில் ஆசிரியர் ஒருவர் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லவந்த நோயாளியை ஏற்றிய குடும்பஸ்தர் ஆகியோருக்கு அரை லீற்றர் கூட பெட்ரோல் இல்லை என சொல்லப்பட்டுள்ளது) எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பியதுடன் அந்த பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடனும் முரண்பட்ட நிலையில் மக்கள் இருந்துள்ளனர்.
இதேவளை அந்த பகுதிக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் , துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க போது முகாமையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் வருகை தந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாடு
துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருளை ஏற்றியிருந்த பார ஊர்தியானது மக்கள் குழப்பம் ஏற்படுதியதையடுத்து மல்லாவி பொலிஸாரினார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய மக்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக எமது பிராந்திய ஊடகவியளாலர் தெரிவித்திருந்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022