முல்லைத்தீவு எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை (photos)
முல்லைத்தீவு - துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமான மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட இரு பீப்பாய்களில் பெட்ரோலை நிரப்ப ஆரம்பித்த போது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த எரிபொருள் நிலையத்தில் பெரும் குழப்ப நிலை உருவாகியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முரண்பாடு
பெரல்களில் பெட்ரோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட (காலையில் ஆசிரியர் ஒருவர் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லவந்த நோயாளியை ஏற்றிய குடும்பஸ்தர் ஆகியோருக்கு அரை லீற்றர் கூட பெட்ரோல் இல்லை என சொல்லப்பட்டுள்ளது) எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பியதுடன் அந்த பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடனும் முரண்பட்ட நிலையில் மக்கள் இருந்துள்ளனர்.
இதேவளை அந்த பகுதிக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் , துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க போது முகாமையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் வருகை தந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாடு
துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருளை ஏற்றியிருந்த பார ஊர்தியானது மக்கள் குழப்பம் ஏற்படுதியதையடுத்து மல்லாவி பொலிஸாரினார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய மக்கள் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக எமது பிராந்திய ஊடகவியளாலர் தெரிவித்திருந்தார்.