இலங்கை விளையாட்டுத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாமல் வெளியிட்ட தகவல்
23 வயதுக்குட்பட்ட ஒரு அணியை ஒவ்வொரு விளையாட்டிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் விளையாட தவறியவர்களுக்கும் இதனூடாக விசேட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.