ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அநுர அரசு வெளியிட்டுள்ள தகவல்
அநுர அரசாங்கம் பொறுப்பேற்று 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைத்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.
உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் குறியீட்டில் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் 1.7 பில்லியன் டொலர் வருமானத்தை பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார சாதனை
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14 மாதங்களில் நாடு பல பொருளாதார சாதனைகளை அடைந்துள்ளது.
ஏற்றுமதி, வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாத் தொழில்கள் மூலம் 29.3 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
இலங்கை முன்னேற்றம்
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீட்டில் முன்னர் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சமகால அநுர அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்புத் திட்டங்கள் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளதாகவும், ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam